யாழில் புரையேறியதில் உயிரிழந்த குழந்தை!

 

tamil lk news

 யாழ்ப்பாணத்தில்(Jaffna) ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று கச்சான் பருப்பு புரையேறியதால் இன்றையதினம்(12) உயிரிழந்துள்ளது.


சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.


 இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,


குழந்தை நேற்றையதினம் (11) கச்சான் சாப்பிட்டவேளை புரையேறிய பின்னர் குழந்தை உறங்கியுள்ளது.



 உறங்கிய குழந்தை நேற்று இரவு எழுந்து வாந்தி எடுத்துவிட்டு அழுதவேளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று அதிகாலை குழந்தை உயிரிழந்துள்ளது.


குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.


சுவாசக் குழாயில் வேர்க்கடலை சிக்கியதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்