காணமல் போன இளைஞன் கிணற்றில் சடலமாக மீட்பு!

  சுதந்திரபுரம் பகுதியில் உள்ள கிணற்றில்  இளைஞனின்   சடலம் ஒன்று இன்று மாலை  கண்டடுபிடிக்கப்பட்டுள்ளது. 


முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தினை சேர்ந்த இளைஞனான  பிலிப்குமார் டினோஜன்  வயது 28 இ கடந்த 11ஆம் திகதி  காணாமல் போயுள்ளார். உறவினர்கள் அவரை தேடிவந்த  நிலையில் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை.


இந்நிலையில் இன்றையதினம் (13)  குறித்த இளைஞனது சடலம் வீட்டு கிணற்றில் மிதந்ததனை அவதானித்துள்ளனர்


பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸிற்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.

tamil lk news


குறித்த இளைஞனின் மரணம் தற்கொலைலயா?  கொலையா என்ற கோணத்தில்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்