இளம் குடும்பஸ்தர் புகையிரத்தல் மோதி மரணம் கொடிகாமம் பகுதியில் சம்பவம்!

 

tamil lk news

 திருமணமாகி இரண்டு மாதங்களேயான இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று கொடுகாமம்  பகுதியில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார் 


இச்சம்பவம் இன்று மதியம் 2.30 மணியளவில் மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக உள்ள புகையிரத பாதையில் இடம்பெற்றுள்ளது


குறித்த குடும்பஸ்தர் யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி  புகையிரதத்தில் மோதியுள்ளதாக தெரியவருகிறது. 



கொடிகாமம் வெள்ளாம்பொக்கட்டி பகுதியை சேர்ந்த 19 வயதான நவரத்தினம் நவாஸ்கரன் என்னும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த குடும்பஸ்தர் திருமணமாகி இரண்டு மாதங்கள் எனவும் தெரியவந்துள்ளது.



சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்