திருகோணமலை (Trincomalee), சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சூடக்குடா கடல் பகுதியில் மர்ம பொருளொன்று இன்று (21) காலை கரையொதுங்கியுள்ளது.
இந்த பொருள் 12 அடி சுற்றளவும், 7 அடி நீளம் கொண்டதாகவும் காணப்படுகிறது.
இது என்ன பொருளென சரியாக இணங்காணப்படவில்லை.
பிரதேச மக்கள் கடற்கரையில் ஒதுங்கிய இதனை அவதானித்து, சம்பூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Trincomalee news



