பரீட்சை எழுதிய முதல்நாளில் மாணவர்களிடம் மர்மநபர்கள் அத்துமீறல்!

  Srilanka News Tamil

பரீட்சை எழுதிய முதல்நாளில் மாணவர்களிடம் மர்மநபர்கள் அத்துமீறல்/Mysterious individuals harass students on the first day of exams


யாழ்ப்பாணத்தில்(Jaffna) க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் பலவந்தமாகத் திணித்துள்ளனர்.


இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.


குறித்த விடயம் தொர்பில் மேலும் தெரியவருவது

முறைப்பாடுகள்

வன்முறைக் குழுக்களின் தோற்றத்தில் இருந்தவர்கள், மாணவிகளுக்கு நெருக்கமாகவும், அவர்களின் கைகளைப் பிடித்து இழுப்பது போன்றும் நடந்துகொண்டமை அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.



இந்த அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் பிரதேச செயலகங்களுக்கு பெற்றோராலும், சமூக நலன்விரும்பிகளாலும் முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது



அதனைத்த் தொடர்ந்து, சம்பவம் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பிரதேச செயலகங்களின் உரிய அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், மாணவ மாணவிகள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

Jaffna News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்