நாடு முழுவதும் கடுமையான அரிசி தட்டுப்பாடு! வியாபாரிகள் எச்சரிக்கை

  Srilanka News Tamil

நாடு முழுவதும் கடுமையான அரிசி தட்டுப்பாடு! வியாபாரிகள் எச்சரிக்கை


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சம்பா, கீரி சம்பா உள்ளிட்ட பல வகையான அரிசிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என மரதகஹமுல அரிசி வர்த்தகர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 


இதேவேளை, அரிசி நெருக்கடியின் போது சந்தையை நிர்வகிக்கும் அதிகாரத்தை அரசாங்கம் இழந்ததாக தேசிய விவசாய சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


பொலன்னறுவை விவசாயிகள், சமீபத்திய மழை காரணமாக, இந்த ஆண்டு விவசாயத்திலிருந்து சரியான அறுவடையைப் பெற முடியவில்லை என்றும், 


தற்போதுள்ள நெல் அறுவடை செய்வதற்குத் தேவையான இயந்திரங்களைக் கண்டுபிடிப்பதிலும் சிரமம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்