Srilanka News Tamil
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழரசுக்கட்சி வவுனியாவில் இன்று தாக்கல் செய்தது
வவுனியா(Vavuniya) மாநகரசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை,
வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையே இன்று தாக்கல் செய்தது.
வேட்புமனுவினை பாராளுமன்றஉறுப்பினர் ப.சத்தியலிங்கம், மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் சகிதம் இன்று மாலை கையளித்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் தமிழரசுக்கட்சி இம்முறை தனித்து போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Vavuniya News