கத்தோலிக்க திருச் சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை வத்திக்கான் நேரப்படி காலை 7.35 அளவில் காசா சண்டா மார்தா இல்லத்தில் உயிரிழந்ததாக வத்திக்கான் அறிவித்தது.
சிவப்பு அங்கிகளுடன், பிஷப் ஆடை போப் பிரான்சிஸுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.
சாண்டா மார்டா இல்லத்தில்
போப் பிரான்சிஸ் உடல் அவர் வசித்த சாண்டா மார்டா இல்லத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை எதிர்வரும் சனிக்கிழமை 26 நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.