யாழில் இரவோடிரவாக கைது செய்யப்பட்ட பெண்

  

Tamil lk news

யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் 10 லீற்றர் கசிப்புடன் 42 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பெண் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றிரவு(22) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.



 கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்