தனியார் பஸ் மீது மரம் விழுந்ததில் பலத்த சேதம்

Tamil lk News


  ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ் மீது மரம் விழுந்ததில்  பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்


ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் நிவ்வெளி பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றின் மீது மரம் விழுந்ததால்,



 மரம் வெட்டப்படும் வரை வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டிருந்தது.



மரம் முறிந்த நேரத்தில் பஸ்ஸில் யாரும் இல்லை என்றும், மரம் முறிந்து விழுந்ததால் பஸ் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்