உலக அழகியாக ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ தெரிவு

  

Tamil lk News

72ஆவது உலக அழகி  இறுதிப்போட்டியில் தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ (Opal Suchata Chuangsri)  வெற்றியீட்டியுள்ளார்.


இறுதிப் போட்டி

72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள HITEX கன்வென்ஷன் சென்டரில் இன்று இரவு இடம்பெற்றது.


'மிஸ் வேர்ல்ட் 2025' கிரீடத்தை வெல்லும் நோக்கில் பல நாடுகளிலுமிருந்தும் 100க்கும் மேற்பட்ட அழகு ராணிகள் போட்டியிட்டனர்.  



மே 10 முதல் நடைமுறையில் உள்ள இந்த ஆண்டு உலக அழகி தேர்வின்படி, 40 பெண்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  


அவர்களில் 18 பேர் ஏற்கனவே அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அது கடந்த சில நாட்களாக ஒவ்வொரு கருப்பொருளின் கீழும் நடைபெற்ற நிகழ்வுகள் மூலம் அவர்கள் காட்டிய திறமைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்.



 அரையிறுதிப் போட்டிகளில், ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 10 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு  அவர்களில் இறுதியாக நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 



இறுதிப் போட்டியாளர்களாக பிரான்ஸ்,எதிரோப்பியா, போலந்து,  தாய்லாந்து போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.



அந்த நால்வரிலிருந்து உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் உலக அழகி தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.



 இந்நிலையில் சற்றுமுன்னர் நிறைவடைந்த உலக அழகியின் இறுதிப்போட்டியில் தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ (Opal Suchata Chuangsri)  வெற்றியீட்டியுள்ளார்.


Tamil lk News


இது மதிப்புமிக்க சர்வதேச போட்டியில் தாய்லாந்துக்கு கிடைத்த முதல் வரலாற்று வெற்றியாகும்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்