நாட்டில் 31 அரச அதிகாரிகள் கைது ; வெளியான அதிர்ச்சி தகவல்!!

 

Tamil lk News

 நடப்பாண்டில் ஐந்து மாதங்களில் இலஞ்ச ஊழல் தொடர்பாக பல்வேறு நிலைகளைச் சேர்ந்த 31 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



கைது செய்யப்பட்ட 31 பேர்களில் எட்டு பேர் பொலிஸ் அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 அதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் பொலிஸ் பரிசோதகர், பிரதி பொலிஸ் பரிசோதகர், நான்கு பொலிஸ் சார்ஜென்ட்கள், இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு பாடசாலை அதிபர் மற்றும் இரண்டு பொது சுகாதார ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்