ஈரானின் தாக்குதலில் உருக்குலைந்த இஸ்ரேலின் ஒரு பகுதி

Tamil lk News

  ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேலின் ஒரு பகுதி பாரிய சேதமடைந்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நேரடி ஒளிபரப்புக்கள் அனைத்திற்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது.



இதனால் இன்று காலையில் ஈரான் மேற்கொண்ட ஆறாவது அலையின் எந்தவொரு காணொளிளோ , புகைப்படங்களோ வெளியாகவில்லை. அதேவேளை ஈரான் மீது மேற்கொள்ளும் தாக்குதலை மாத்திரம் இஸ்ரேல் ஒளிபரப்பி வருகிறது.



 அதேவேளை இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் உலக நாடுகளை அச்சம் கொள்ள வைத்துள்ளது.

Tamil lk News


 இந் நிலையில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 20 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்