ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
"வாழ்த்துக்கள், ஜனாதிபதி ட்ரம்ப். அமெரிக்காவின் வலிமையால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைக்கும் உங்கள் துணிச்சலான முடிவு வரலாற்றை மாற்றும்" என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!
ட்ரம்பின் தலைமை மத்திய கிழக்கின் அமைதியான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வரலாற்றின் ஒரு மையப்புள்ளியை உருவாக்கியுள;sJ என்று கூறிய neதன்யாகு தாக்குதல் முடிந்தவுடன் ட்ரம்பிடம் இருந்து தனக்கு உடனடியாக அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார்.
ஒபரேஷன் ரைசிங் லயன், இஸ்ரேல் உண்மையிலேயே அற்புதமான காரியங்களைச் செய்துள்ளது. ஆனால் ஈரானின் அணுசக்தி வசதிகளுக்கு எதிரான இன்றைய நடவடிக்கையில், அமெரிக்க உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது.
உவகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

யாழ். நயினாதீவில் நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் நிகழ்ந்த அதிசயம்!
இன்றைய தாக்குதலில் அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.