அரச மிருக வைத்தியர்கள் சங்கம் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சங்கம் அறிவித்துள்ளது.
அரச மிருக வைத்தியர்களுக்காக தனியான பணி யாப்பு உருவாக்கப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த யாப்பினை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பணிகள் ஸ்தம்
இந்தப் போராட்டம் காரணமாக இன்றைய தினம் அனைத்து அரச மிருக வைத்தியசாலைகளினதும் பணிகள் ஸ்தம்பிக்கும் என அரச மிருக வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் உபுல் ரஞ்சித் குமார தெரிவித்துள்ளார்.