Vavuniya News
கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா(Vavuniya) மாவட்டக் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் நேற்று (22.07.2025) கைது செய்யப்பட்டார்.வவுனியா இசைக்கருவிகள்
தகவலின் அடிப்படையில்
நேற்று முன்தினம் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளி வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பில் இருந்து வருகை தந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு,
வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரும் இணைந்து செட்டிகுளம் – துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர்.
நிலத்தின் கீழ்
இதன்போது, நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள், ரி – 56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5 ஆயிரத்து 600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.
இதனை அடிப்படையாகக் கொண்டு அந்த வீட்டின் உரிமையாளரான 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.