அத்தை மகளை திருமணம் செய்தததால் நூதன தண்டனை !!

  

Tamil lk News

அத்தை மகளை திருமணம் செய்தததால் காதல் ஜோடிக்கு நூதனமான தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் கஞ்சமஜ்ஹிரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது சொந்த அத்தை மகனை (தந்தையின் சகோதரி மகன்) காதலித்து திருமணம் செய்துள்ளார்.


News Thumbnail
தமிழர்களின் நடைபாதை கடைகள் சில அகற்றம் - வவுனியாவில்....!


 ஒடிசா வழக்கப்படி அத்தை மகன், மகளை திருமணம் செய்வது சமூக வழக்கத்துக்கு எதிரானது. இதனால் அவர்களுக்கு தண்டனை வழங்க கிராமத்தினர் முடிவு செய்தனர்.


News Thumbnail
வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றம்; பழங்களை உண்டு மகிழ்ந்த ஊழியர்கள்...!


காதல் ஜோடியை வயலுக்கு அழைத்துச் சென்ற கிராமத்தினர், அவர்களை மாடு போல் ஏரில் பூட்டி நிலத்தை உழச் செய்தனர்.



 அவர்களை ஒருவர் பிரம்பால் அடித்தபடி நிலத்தை உழச் செய்தார். அதன்பின் அவர்கள் கிராம கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாவத்தை போக்குவதற்கான சடங்குகளை செய்ய வைத்தனர்.


 இந்த வீடியோ வைரலாக பரவியதால் கண்டனம் எழுந்துள்ள நிலையில் கிராமத்தினர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்யவுள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்