காஸா யுத்தத்தை நிறுத்த திரண்ட இஸ்ரேல் மக்கள்...!!

  

Tamil lk News

காஸா யுத்தத்தை நிறுத்துமாறு கோரி, ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.




இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், உடனடி போர் நிறுத்தத்தையும், காஸாவில் நடைபெறும் மனிதாபிமான சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டுமெனவும் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஆர்ப்பாட்டக்காரர்கள் “இனி போர் வேண்டாம்” எனும் வாசகங்களைக் கொண்ட பதாகைகள் ஏந்தியவாறு வீதிகளில் பேரணியாக திரண்டனர்.


இஸ்ரேல் அரசு மீது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகக்குழுக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதேவேளை, காஸாவிற்கு செல்லும் உதவிகளை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளதால், அங்கு பட்டினி மற்றும் போசணைக் குறைபாடுகள் காரணமாக நூற்றுக் கணக்கானோர் மரணிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்