எஸ்.எல்.சி டி20 லீக் தொடர் இன்று ஆரம்பம்

 

Tamil lk News
 இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் மூன்று அணிகளைக் கொண்ட முத்தரப்பு உள்ளுர் ரி20 லீக் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வே அணியுடனான வெள்ளைபந்து கிரிக்கெட் தொடர் மற்றும் ஆசியக் கிண்ண ரி20 தொடர் ஆகியவற்றுக்கு தயாராகும் நோக்கில் இந்த தொடர் நடைபெறவுள்ளது. 




இந்த மாதம் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் தொடர் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, உள்ளுர் கிரிக்கெட் அட்டவணையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இப் புதிய தொடரை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளது.






இன்று முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள 3 அணிகளும் நீலம், பச்சை மற்றும் சாம்பல் ஆகிய நிறங்களை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று 4 தடவைகள் எதிர்த்தாடும். இதற்கு அமைய மொத்தமாக 12 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும். அனைத்துப் போட்டிகளும் கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 




இந்நிலையில் குறித்த போட்டிகள் அனைத்தையும் பார்வையிட ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற்பகல் 12.30 மணிக்கு மைதானம் ரசிகர்களின் வருகைக்காக திறக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்