மாரவில, முதுகட்டுவ கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்டு அடையாளம் தெரியாத நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உடலில் தலை, கைகள் மற்றும் கால்கள் எதுவும் இன்றி நீல நிற காற்சட்டையுடன் உடலின் ஒரு பகுதி மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த உடல் ஒரு ஆணுடையதாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், மேலும் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka Tamil News
.jpg)


