வவுனியாவில் - பட்டா வாகனத்தை மோதித்தள்ளிய ரயில்; தாய், தந்தை, குழந்தை காயம்!!

 

Tamil lk News

 Vavuniya News

வவுனியாவில்(Vavuniya) இடம்பெற்ற ரயில் விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றது.


கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணித்த ரயில் இன்று மாலை வவுனியா பிரதான ரயில் நிலையத்தை அடைந்ததுடன், அங்கிருந்து புறப்பட்டு யாழ்.நோக்கி பயணித்தது. 



இதன்போது வவுனியா மன்னார் பிரதானவீதியில் உள்ள பாதுகாப்பான ரயில் கடவையில் சென்றுகொண்டிருந்த போது வீதியால் பயணித்த பட்டா வாகனத்தை மோதித்தள்ளியது.

வைத்தியசாலையில் அனுமதி

விபத்தில் வாகனத்தில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களது நான்கு வயது குழந்தை ஆகியோர், காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.



அவர்கள் பயணித்த வாகனம் கடும் சேதத்திற்குள்ளாகியது.

சமிஞ்சை கோளாறு

குறித்த விபத்து ரயில் சமிஞ்சையில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 



இதேவேளை விபத்து இடம்பெற்ற கடவையில் ஊழியர் ஒருவர் 24 மணிநேரங்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். 



வழமையாக அந்த கடவையூடாக ரயில் செல்லும் போது மூடப்படுகின்ற பாதுகாப்புக்கதவு இன்று மூடப்படாமையினால் இவ் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. 


இவ் விபத்தினால் அரை மணிநேர தாமதத்திற்கு பின்னரே ரயில் தனது பயணத்தை ஆரம்பித்தது. 


சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil lk News

Tamil lk News

Tamil lk News

Tamil lk News

Tamil lk News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்