வீடொன்றின் அஞ்சல் பெட்டியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்கள்

  

Tamil lk News

மத்தேகொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் அஞ்சல் பெட்டியிலிருந்து 47 T-56 தோட்டாக்களும் 9 மில்லிமீட்டர் துப்பாக்கி ரவைகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 




தற்போது வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்து வீட்டின் உரிமையாளரால் வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




நேற்று (08) வீட்டின் உரிமையாளர் குறித்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அஞ்சல் பெட்டி பாதுகாப்பாக பூட்டுப் போடப்பட்டிருப்பதை கண்டுள்ளார். 




இந்நிலையில் அயல்வாசிகளின் உதவியுடன் அதனை திறந்துபார்த்தபோது இந்த வெடி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்