நுகேகொட பேரணி நடுரோட்டில் குளறி அழுத மகிந்தவின் ஆதரவாளர்

  

Tamil lk news

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சிகள் பல இணைந்து ஏற்பாடு செய்துள்ள “மாபெரும் மக்கள் குரல் பேரணி நுகேகொடை ஆனந்த சமரகோன்" திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றது.


பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், இன்று நுகேகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பேரணியில் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்



குறித்த பேரணியில் எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றினர்.



இந்த நிலையில் கூட்ட நெரிசலுக்குள் வந்த நபர் ஒருவர் நடு வீதியில் மகிந்தவிற்கு ஆதரவாக கடுமையான தொனியில் தனது குரலை எழுப்பி அழுது குளறிய காட்சிகள்  வைரலாகி வருகின்றன.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்