இலங்கையில் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட தகவல் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கான வறுமைக் கோட்டின் படி, இலங்கையில் வாழும் ஒரு தனி நபருக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்சம் தொகையானது 13,810 ரூபாய் போதும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இந்தத் தொகை செப்டம்பர் மாதம் 13,772 ரூபாயாக காணப்பட்டிருந்தது.
மாவட்ட அடிப்படையில் கணிப்பீடு
இந்த நிலையில் மாவட்டங்களின் அடிப்படையின்படி கொழும்பு மாவட்டத்தில் வாழும் தனிநபர் ஒருவருக்கு தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அதிகளவான செலவுகளை செய்ய வேண்டி இருக்கும். இதன் அடிப்படையில் கொழும்பில் வாழும் தனி நபர் ஒருவருக்கு செலவாக 14,894 ரூபாய் தேவைப்படும் போது மொனராகலை மாவட்டத்தில் தனிநபர் ஒருவருக்கு வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு 13,204 ரூபாய் போதுமானதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 அக்டோபரில் வறுமை கோட்டின் அதிகரிப்புக்கு வழி வகுத்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டி உள்ளதாக தெரியவந்துள்ளது.



