இலங்கை எதிர்வரும் மார்ச் மாதம் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இருளில் மூழ்கக்கூடும் என்பதனை மின்சார பொரறியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் விரரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கொண்டு இந்த விடயத்தை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து இருந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், இப்போது இலங்கையில் மின் உற்பத்தி செய்யப்படும் நீர் தீர்க்கங்களின் தற்போதைய நீர் மட்டம் 25 சதவீதம் என்பதனை கணிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதும் கடந்த வருடத்தின் விட இந்த வருடத்தின் மழை வீழ்ச்சி குறைவடைந்ததால் மேலும் எதிர்காலத்தில் நீர்மட்டம் குறைவடைவதற்கான நிலை காணப்படுவதாகவும் இதனால் எதிர்காலத்தில் மின் உற்பத்தியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும்.
மின் உற்பத்திக்கான நிலக்கரி
தற்போது நிலக்கரியை தாங்கிய 5 ஆவது கப்பலே நாட்டை வந்தடைந்த நிலையில் இருப்பதால் இவை அனைத்தும் நிறைவடைந்தால் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு முழுவதும் இருளில் மூழ்க கூடும்.
இதுவரைக்கும் 24 நிலக்கரி தாங்கிய கப்பல்கள் நாட்டை வந்து அடைந்திருக்க வேண்டும் அதனை அரசாங்கம் தவறவிட்டுள்ளது என்பதால் எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



