மட்டக்களப்பில் இறந்த காதலியின் இறுதி கிரிகையின் போது காதலிக்கு தாலி கட்டி அனைவரையும் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உண்மையான காதல்
இந்த சம்பவம் உண்மையான காதல் என்றும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வந்து கொண்டிருக்கிறது.
இறந்த பெண்ணும் இளைஞனும் 10 வருட காலமாக காதலித்திருக்கிறார்கள் என்று இவர்களின் காதல் மிகவும் புனிதமான காதல் என்றும் இறந்த பெண்ணின் தோழிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது
இந்த நிலையில் குறித்த பெண் கடந்த 29. 12 .2022 அன்று திடீர் மரணம் அடைந்த நிலையில் காதலியின் இறுதிக்கிரியைக்கு சென்ற காதலன் உயிரிழந்த தனது காதலிக்கு தாலியை கட்டி அவரை சுமங்கலியாக வழி அனுப்பிய சம்பவம் அங்கிருந்து அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இவ்வாறான செயல்கள் இந்தியாவிலும் நிகழ்ந்திருந்தாலும் இதுவே முதல் தடவையாக இலங்கையில் நடைபெற்று உள்ளது.
Tags:
srilanka




