வளிமண்டலவியல் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்

 

காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த தகவலுக்கு அமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் அல்லது இரவு வேலைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று ஊவா மாகாணத்தின் தென்கரையோர பிரதேசங்களிலும் காலை வேலைகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவராக இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்