வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்




கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தடுப்புகள் ஏற்படுத்திருந்தபோது அதனை தாண்டி செல்ல முற்பட்டதாகவும் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும்.

பொலிசார் இன்றைய தினம் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

வேலன் சுவாமிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

இதன் பின்னர் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்