நொரோச்சோலையில் ஜெனரேட்டர் பழுதடைந்தது: மீண்டும் மின்வெட்டு? (srilanka news)

tamillk.com


 நொரோச்சோலை அனல்மின் நிலையத்தின் 3வது மின் உற்பத்தி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


அமைச்சர் டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


காஞ்சனா விஜேசேகரவின் டுவிட்டர் செய்தியில், அந்த அனல்மின் நிலையத்தின் மூன்றாவது ஜெனரேட்டரை ஏப்ரல் மாதம் திருத்தியமைக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி, இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான டீசல் மற்றும் எரிபொருளானது தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும்.


மின்தடை காரணமாக மின்வெட்டு இருக்காது என அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்