பல நாள் மீன்பிடி கப்பலில் இருந்த மீனவர் உயிரிழந்தார் (srilanka news)

 

tamillk.com

திக்விட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து சர்வதேச கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலில் பணிபுரிந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கல்பிட்டி குரக்கன்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று (மார்ச் 18) காலை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


உயிரிழந்தவர் மேலும் 5 பேருடன் பெப்ரவரி 3ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.


அங்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கப்பலை துறைமுகத்திற்கு திருப்பிய போது மார்ச் 16ஆம் திகதி பிற்பகல் கப்பலிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சடலம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்