( srilanka tamil news-tamillk ) பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்தில் அருகில் 16 சந்தேக நபர்கள் போதை பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையை தலங்கம பொலிஸ் நிலையம் மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீரென்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 7 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 20 கிராம் 900 மில்லி கிராம் கேரளா கஞ்சா அத்துடன் 80 மில்லி கிராம் ஹெரோயின் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மஸ்கெலியா,திஸ்ஸமஹாராமய,பத்தரமுல்ல,மலமே,குளியாபிட்டிய,கிருலப்பனை,பேஸ்லைன் வீதி, கொட்டாஞ்சேனை, ஹொகந்தர சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் அனைவரையும் கடுவேல நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதுடன் 14 பேருக்கு அபதாரம் விதிக்கப்பட்டதுடன் இதில் ஒரு சந்தேக நபருக்கு மாத்திரம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து குடிவரவு திணைக்களத்துக்கு அருகில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கடவுள் சீட்டுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த 9 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு திணைக்களத்தில் இருந்து கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொடுப்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் சேகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



