வவுனியாவில் கிறிஸ்டி ராஜாவின் 24 ஆவது நினைவு தினம் நிகழ்வுகள்

vauniya tamil news


தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளராக இருந்த கிறிஸ்ரி குகராஜாவின் நினைவு தினமான இன்று(15) வவுனியாவில் பைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள அவருடைய நினைவு இடத்தில்  நினைவு அஞ்சலி நினைவுகள் இடம் பெற்றது.


இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் புரூஸ் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

vavuniya tamil news


வவுனியாவில் கிறிஸ்டி குகராஜா மிக நீண்ட காலமாக தமிழீழ விடுதலை இயக்கத்தில் பொறுப்பாளராக இருந்த நிலையில் 1999 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்