15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு Tamillk news

tamillk news


 மட்டக்களப்பு, வாகரையில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோம் செய்த 18 வயது இளைஞரை எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று சனிக்கிழமை (26) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.


குறித்த சிறுமியை காதலித்துவந்த இளைஞர்,  திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. 



அதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை (25)  பொலிஸார் அந்த இளைஞரை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.


இந்நிலையில், கைதான இளைஞர் நேற்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் செப்‍டெம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

batticaloa tamil news

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்