ரித்திகல பிரதேசத்தில் பாதுகாப்பற்ற விவசாய குழிக்குள் விழுந்த நான்கு காட்டு யானைகளை மீட்கும் நடவடிக்கையை வனவிலங்கு அதிகாரிகள் இன்று (29) ஆரம்பித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் நான்கு காட்டு யானைகள் விழுந்துள்ளன. ஒரே வலையில் விழுந்த நான்கு காட்டு யானைகளில் இரண்டு தாய் யானைகளும் அவற்றின் இரண்டு குட்டிகளும் அடங்குவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவு தேடி கிராமத்திற்கு வந்த யானைக்கூட்டத்தில் இருந்த இரண்டு தாய் யானைகளும் அவற்றின் இரண்டு குட்டிகளும் பாதுகாப்பற்ற பயிர்ச் செய்கை குழிக்குள் விழுந்ததையடுத்து ரித்திகல கனேவல்பொல மொரகொட மற்றும் அழகொல்லாவ வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் இணைந்து நால்வரையும் மீட்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
Tags:
srilanka