(srilanka tamil news-tamillk) சீரற்ற காலநிலையினால் தொடரும் அனர்த்தங்களினால் போக்குவரத்து இடையூறுகளுக்கு முகங்கொடுக்கும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் போக்குவரத்துச் சிரமங்கள் ஏற்படும் பட்சத்தில் பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கடமையில்
அதேவேளை, ஆரம்பமான உயர்தரப் பரீட்சை பாதுகாப்பு கடமையில் 8,486 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 2,298 பரீட்சை நிலையங்களில் கடந்த (4) ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை இம்மாதம் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
srilanka