இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு....!

tamil lk news-srilanka


 இலங்கை மத்திய வங்கியில் (Central Bank of Sri Lanka) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பண பரிவர்த்தனைகளைப் பெற முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.


முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தோட்டங்களிலும், அவ்வாறான போலியான இடங்களிலும் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும், மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பண பரிவர்த்தனைகளைப் பெற முடியும்.


சில போலி நிறுவனங்கள் இதுபோன்ற பல்வேறு முறைகளில் வைப்புத்தொகையை ஏற்றுக்கொண்டால், மத்திய வங்கி அல்லது பொலிஸிடம் மக்கள் முறைப்பாடு செய்ய வேண்டும்.



எனவே, மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிறுவனத்திலோ அல்லது பயிர்ச்செய்கை உள்ளிட்ட போலி பண முதலீட்டு திட்டங்களிலோ மக்கள் பணத்தை வைப்பிலிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்