இஸ்ரேல் பிரதமர் பிடிவாதம் : ரபாவில் ஓடுமா இரத்த ஆறு..! tamil lk news

tamil lk news


 காசாவின் ரபா நகருக்குள் தரைப்படையை அனுப்பி அந்த நகரை ஆக்கிரமிப்பது உறுதி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார்.


இது குறித்து அவர் கூறுகையில் "ஹமாஸ் உடனான போரில் வெற்றிபெறுவதற்கு ரபா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். அது நடக்கும், அதற்கான ஒரு நாள் உள்ளது" என கூறினார்.

பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த பேச்சுக்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

ரபாவுக்கு தரைப்படையை அனுப்புவது மிகப்பெரிய தவறு என்றும், அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பதற்கான நம்பகமான திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்