யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்....! jaffna news

 


யாழில் வயோதிப பெண்ணொருவரின் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சடலம் நேற்றைய தினம் (9.4.2024) யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது.


63 வயதுடைய சாந்தினி எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



குறித்த பெண், பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், நேற்றைய தினம் வீட்டில் சடலமாக காணப்பட்ட நிலையில் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்