கேகாலையில் (Kegala) இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (7.6.2024) கொழும்பில் (colombo) இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் கேகாலை - மங்களகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முச்சக்கர வண்டியொன்று எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துள்ளனர்,
விபத்தில் படுகாயமடைந்த யுவதி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Srilanka Tamil News......!



