மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

 

tamil news

இராம பிரானால் வழிபட்ட பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நடைபெற்றுள்ளது.


பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்று நண்பகல் வெகு விமர்சையாக தீர்த்தோற்சவம் இடம்பெற்றுள்ளது.


மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.



இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இரத உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.


மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.


இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.


அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.



வெளிவீதியில் எருது வாகனத்தில் தீர்த்தக்கரையில் எழுந்தருளி அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


இன்றைய தீர்த்தோற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.


இதன்போது தந்தையை இழந்தவர்கள் இன்றைய தினம் பிதிர்க்கடன் செலுத்தி தமது தோசங்களை நிவர்த்திசெய்தமையும் குறிப்பிடத்தக்கது.

tamil lk news

tamil lk news




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்