கிராமத்திற்குள் உள்நுழைந்த யானையால் பரபரப்பு!

 

tamil lk News

 திருகோணமலை (Trincomalee) - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் கல்லாம்பார் கிராமத்திற்குள் இன்று  அதிகாலை காட்டு யானையொன்று உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் கிராம மக்கள் யானையை விரட்டியடித்துள்ளனர்.


இந்த யானை நடு ஊருக்குள் நுழைந்து, வீடுகளிலுள்ள பயிர்களை சாப்பிடுவதற்கு முனைந்தபோது கிராம மக்கள் யானையை துரத்தி வெளியேற்றியுள்ளனர்.



அத்தோடு கையடக்க தொலைபேசியில் அந்த காட்சியை பதிவும் செய்துள்ளனர்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்