புகையிரதம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் காயம் வவுனியாவில் சம்பவம்! Vavuniya Tamil News

  வவுனியாவில் புகையிரதம் மோதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர்.


tamil lk news


யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் இன்று காலை 9 மணியளவில்,


வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.


குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதியான 44 வயதுடைய போக்குவரத்து பொலிசார் காயமடைந்துள்ளார். 



காயமடைந்த பொலிசார் வவுனியா பொது வைத்தியசாலயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்