இன்று முதல் குறையும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

  நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.


அதன்படி உருளைக்கிழங்கு, காய்ந்த மிளகாய், நெத்தலி, கடலைப் பருப்பு உட்பட பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

tamil lk news


பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று (22) முதல் நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோருக்கு கிடைக்கும்.


ஒரு கிலோ கச்சானின் முந்தைய விலை  1095 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை  995 ரூபாவாக  குறைக்கப்பட்டுள்ளது.


ஒரு கிலோ பழுப்பு சீனி 340 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை  300 ரூபாவாகவும் 




இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் முந்தைய விலை  210 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 180 ரூபாவாகவும் 


ஒரு கிலோ சிவப்பு பட்டாணியின் முந்தைய விலை  795 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை  765 ரூபாவாகவும் 


ஒரு கிலோ நெத்தலியின் முந்தைய விலை  960 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 940 ரூபாவாகவும் 


ஒரு கிலோ காய்ந்த மிளகாய் முன்பு  845 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை  830 ரூபாவாகவும் 




பாஸ்மதி அரிசியின் முந்தைய விலை (பிரீமியர்) கிலோவுக்கு  655 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை  645 ரூபாவாகவும்


இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் முந்தைய விலை  240 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை  230 ரூபாவாகவும்




ஒரு கிலோ பருப்பின் முந்தைய விலை  290 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை  288 ரூபாவாகவும்


ஒரு கிலோ வெள்ளைச் சீனி   242 ரூபாவாக இருந்த நிலையில்  புதிய விலை  240  ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்