சேருவில பிரதான வீதியில் பட்டா ரக வாகனத்துடன் வான் மோதி விபத்து!

  சேருவில - தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா ரக வாகனத்துடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவ்விபத்து சம்பவம் இன்று (24.01.2025) மாலை இடம்பெற்றுள்ளது.


 

tamil lk news

காத்தான்குடியில் இருந்து திருகோணமலை நோக்கி 10 பேருடன் பயணித்த வான் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்கு முன்னால் வீதி ஓரமாக தரித்து நின்ற டிமோ பட்டா வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

tamil lk news


 விபத்தில் காயமுற்ற 2 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 1 ஆண் உள்ளிட்ட 6 பேர் சேருவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்துக்குள்ளான வானில் 2 குழந்தைகள் உட்பட 6 பெண்களும், 2 ஆண்களும் பயணம் செய்துள்ளனர். 



சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வற்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்