14 வயது சிறுமிக்கு பண ஆசை காட்டி நடந்த கொடூரம் - பெண் உட்பட மூவர் கைது!

  முல்லைத்தீவு (Mullaitivu) - புதுக்குடியிருப்பு பகுதியில்  சிறுமி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில்  குடும்ப பெண் ஒருவரும், அவரது கணவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில், கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை  மூன்று மாதங்களாக  வீட்டில் வைத்து பாலியல் தொழில் ஈடுபட்டு வந்துள்ளார். 

tamil lk news


பின்னர் குறித்த சிறுமி கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். 


குறித்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்த பெற்றோர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.


இதனையடுத்து கிளிநொச்சி வைத்தியசாலை பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்  உண்மை வெளியாகியுள்ளது.


குறித்த சிறுமிக்கும் கிளிநொச்சியில் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 



பின்னர் அந்த பெண், புதுக்குடியிருப்பு பெண்ணுக்கும் சிறுமிக்கும் தொடர்பை ஏற்படுத்தி சிறுமிக்கு பண ஆசையினை காட்டி புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் உள்ள   வீட்டிற்கு  சிறுமி அழைத்து செல்லப்பட்டு பாலியல் தொழில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.


குறித்த பெண் சிறுமியினை வைத்து தொழில் செய்து பணத்தினை சிறுமிக்கு கொடுக்க மறுத்ததனை தொடர்ந்தே சிறுமி வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.


இதனையடுத்து கிளிநொச்சி பொலிஸாரினால் கிளிநொச்சியில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.



அதனை தொடர்ந்து  புதுக்குடியிருப்பு பொலிஸிற்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு குடும்ப பெண்ணும் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுகுடியிருப்பு மற்றும் கிளிநொச்சி பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்