indian News Tamil
புது டெல்லி தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பத்திற்காக, பயணிகள் தொடருந்தில் ஏற முற்பட்ட போது, அங்கு திடீர் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, 13 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நரேன் (LNJP) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தொடருந்து நிலையத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டதால், பல பயணிகள் மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் இருப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது 'X'தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Distressed by the stampede at New Delhi Railway Station. My thoughts are with all those who have lost their loved ones. I pray that the injured have a speedy recovery. The authorities are assisting all those who have been affected by this stampede.
— Narendra Modi (@narendramodi) February 15, 2025
. कुम्भ के आयोजक और यूपी के CM के रूप में इस कुव्यवस्था के लिए आपको जिम्मेदारी लेकर इस्तीफा करना चाहिये. आखिर यह कैसी कुव्यवस्था है की कुम्भ में भगदड़ से मृत्यु हुई. आज New Delhi Railway Station कुम्भ जाने वाले दर्जनों लोगों की मृत्यु हुई है? प्रति दिन ट्रेन में मार-पिटाई की खबर… pic.twitter.com/94iayTqHTv
— Tarique Anwar Champarni (@Champarni_Tariq) February 15, 2025