டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி - ஐந்து பேர் காயம்

  டொராண்டோவில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்  உயிரிழந்ததுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்று டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


டொராண்டோ- வடக்கு யார்க்கில் உள்ள யார்க்டேல் ஷாப்பிங் சென்டருக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு  இடம்பெற்றுள்ளது. 

Tamil lk News


அதனையடுத்து பொது பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இருப்பதாக  பொலிஸார்  நம்பவில்லை என்று கடமை ஆய்வாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 


துப்பாக்கிச்சூடு தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,  



துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த  நபர் 40 வயதுடையவர் . ஆனால் மேலதிக விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் உறவினர்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை . அத்துடன் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் உள்ளனர்.  ஆனால் சந்தேக நபர்களும் பாதிக்கப்பட்டவர்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களா என்பதை புலனாய்வாளர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. 




பொலிஸாரிடம்  இன்னும் சந்தேக நபர்களின் விளக்கங்கள் வெளியிடப்படவில்லை . காயமடைந்தவர்களின் நிலை தீவிரமானது முதல் ஆபத்தானது வரை இருப்பதாக டொராண்டோ துணை மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.- என்றார். 




இதற்கிடையே துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தியால் தான் "தொந்தரவு" அடைந்ததாக டொராண்டோ மேயர் ஒலிவியா சோவ்  தெரிவித்துள்ளார். 




"எனது அலுவலகம் டொராண்டோ பொலிஸாருடன் தொடர்பு கொண்டுள்ளது.  அவர்கள் இப்போது சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உள்ளூர் கவுன்சிலர், துணை மேயர் மைக் கோலுடன்" தொடர்பு கொண்டுள்ளனர்." என்று சோவ் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்