இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் 42 வயதுடையவர் என வெள்ளவத்தை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வெள்ளவத்தை 33வது வீதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் விமான நிலைய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்த நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.