ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்கான இலங்கை அணி இன்று (10) அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வழக்கமான அணித்தலைவர் சாமரி அதபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் இந்த போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் இப்போட்டியானது செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெற உள்ளது.
சாமரி அதபத்து (கேப்டன்), ஹாசினி பெரேரா, விஸ்மி குணரத்ன, ஹர்ஷித சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி (துணைத் தலைவர்), இமேஷா துலானி, துலானி, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி, உதேசிகா பிரபோதனி, மல்கி மதரா, அச்சினி குலசூரிய என்பவர்கள் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.



