காங்கேசன்துறை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி இன்று காலை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் காலை 6.50 மணியளவில் பயணித்த யாழ்தேவி தொடருந்தில் மோதியே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நல்லூர் பகுதியை சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக யாழ்ப்பாணம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



